26 ஆகஸ்ட், 2009

மாத்தறையில் இருந்து பருத்தித்துறைக்கு சமாதான பாதயாத்திரை-

மாத்தறையில் இருந்து பருத்தித்துறைக்கு சமாதான பாத யாத்திரையை மூன்று சாரணர்கள் நேற்றுக்காலை ஆரம்பித்துள்ளனர். மாத்தறை தெவேந்திரமுனையில் இருந்து இந்த யாத்திரை ஆரம்பமாகியுள்ளது. பி.எல்.ஹசன் சணங்க, காந்த குணவர்த்தனா, பிரசாத் மஞ்சுல ஆகிய மூன்று சாரணர்களே இந்தப் பாதயாத்திரையை நடத்துகின்றனர். வவுனியாவை வந்தடைந்து அங்கிருந்து ஏ9 ஊடாக பாதயாத்திரையாக யாழ்ப்பாணம் சென்று பருத்தித்துறை முனையில் யாத்திரையை அவர்கள் பூர்த்தி செய்யவுள்ளனர். இவர்கள் தமது பாத யாத்திரையின்போது இரவு நேரங்களில் வழிபாட்டுத் தலங்கள், மத நிலையங்கள் மற்றும் பொலிஸ், இராணுவ முகாம்களிலும் தங்கவுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக