26 ஆகஸ்ட், 2009

புலிகளுக்கு உதவிய சந்தேகநபர் சென்னையில் கைது-

இந்திய விசேட காவல்துறையினரால் நேற்று சென்னையில் வைத்து புலிகளுக்கு உதவியவர் என்ற சந்தேகத்தின்பேரில் இலங்கையர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் தமிழகத்தில் கடந்த 1999ம் ஆண்டுமுதல் 18வருடங்களாக சந்தேகத்தின்பேரில் தேடப்பட்டு வந்த ஒருவரென்று தமிழக பொலீசார் கூறியுள்ளனர். ஜோன் பிரபாகரன் என்ற பெயரையுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் போலியான கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் தமிழகத்தில் வசித்து வந்ததாகவும், புலிகளுக்கும், சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்ல முற்படுபவர்களுக்கும் போலியான ஆவணங்களை பெற்றுக் கொடுத்திருப்பதாகவும் இவர்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக