23 டிசம்பர், 2009

திருச்செந்தூர்: திமுக வெற்றி





திருச்செந்தூர்இ டிச.23: திருச்செந்தூர் சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலி்ல் பதிவான வாக்குகளை எண்ணும்பணி இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்றது.

அனிதாராதாகிருஷ்ணன் ( தி.மு.க)இ அம்மன் நாராயணன் ( அ.தி.மு.க)இ கோமதி்கணேசன் ( தே.மு.தி.க.இ) உள்ளிட்டோர் களத்தில் இருந்தனர்.

இறுதிச் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் 46இ861 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

14-வது மற்றும் இறுதிச் சுற்று

அனிதாராதாகிருஷ்ணன் (தி.மு.க) - 75223

அம்மன் நாராயணன் ( அ.தி.மு.க) - 28362

கோமதி்கணேசன் ( தே.மு.தி.க.) - 4186



வந்தவாசி: திமுக வெற்றி




செய்யார், டிச. 23: வந்தவாசி சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலி்ல் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்றது.

வந்தவாசி தொகுதியில் பதிவான வாக்குகள் அனைத்தும் செய்யார் அரசு கலைக் கல்லூரியில் எண்ணப்பட்டன.

கமலக்கண்ணன் ( தி.மு.க), முனுசாமி ( அ.தி.மு.க.),

ஜனார்த்தனம் ( தே.மு.தி.க.) உள்ளிட்டோர் களத்தில் இருந்தனர்.

இறுதிச் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்திருக்கும் நிலையில் திமுக வேட்பாளர் கமலக்கண்ணன் 38,017 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

16-வது மற்றும் இறுதிச் சுற்று

கமலக்கண்ணன் ( தி.மு.க): 78,827

முனுசாமி ( அ.தி.மு.க.): 40,210

ஜனார்த்தனம் ( தே.மு.தி.க.): 7,068


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக