8 டிசம்பர், 2009

தேர்தல் அறிவிப்புக்கு பின்னர் மேற்கொள்ளப்படும் ஆட்சேர்ப்பு, பதவியுயர்வு செல்லுபடியற்றதாகும் -தேர்தல்கள் திணைக்களம் அறிவிப்பு



இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் அரசியலமைப்பு ஏற்பாடுகளுக்கு முரணாக, தேர்தல் அறிவிப்பிற்குப் பின்னர் கூட்டுத்தாபனங்கள், நியதிச் சபைகள் உள்ளிட்ட அரச மற்றும் மாகாண நிறுவனங்களில் ஆட்சேர்ப்புக்கள், இடமாற்றங்கள் மற்றும் பதவியுயர்வுகள் இடம்பெறுவதாகத் தேர்தல்கள் திணைக்களத்திற்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அவையாவும் செல்லுபடியற்றதாகும் என்று திணைக்களம் அறிவித்துள்ளது. இவை தொடர்பில் தேர்தல்கள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அரசியலமைப்பின் 17ஆவது திருத்தச்சட்டத்தின் 104ஆ(4),104(ஒ) ஆகிய உறுப்புரைகளின் ஏற்பாடுகளின் பிரகாரம் அமைச்சுக்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச் சபைகளின் தலைவர்களின் கவனம் ஈர்க்கப்படுகின்றது.

இந்த ஏற்பாடுகளின் பிரகாரம் அரச, கூட்டுத்தாபனம், நியதிச்சபை நிறுவனங்களின் ஆட்சேர்ப்பு, இடமாற்றம், பதவியுயர்வு என்பன தேர்தல் காலங்களில் நிறுத்தி வைக்கப்படுவது அவசியமாகும். தேர்தல் காலமென்பது பிரகடனம் வெளியிடப்பட்ட திகதிக்கும், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் தினத்திற்கும் இடைப்பட்ட காலப்பகுதியாகும்.

ஜனாதிபதி தேர்தலை பொறுத்து இக்காலப்பகுதியானது 23.11.2009 தொடக்கம் முடிவுகள் அறிவிக்கப்படும் தினம் வரை ஆனதாகும் மேற்குறிப்பிட்ட திகதியிலோ அல்லது அதற்கு பின்னர் இடம்பெறும் நியமனங்கள், பதவியுயர்வுகள், இடமாற்றங்கள் யாவும் செல்லுபடியற்றதாக்கப்படும்,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக