8 டிசம்பர், 2009

பொதுநலவாய மாநாட்டுக்கான அங்கீகாரம் மஹிந்தவின் தலைமைத்துவத்துக்கான பரிசு-வெளியுறவு அமைச்சர் போகொல்லாகம பெருமிதம்



ஆம் ஆண்டில் பொது நலவாய நாடுகளின் மாநாட்டினை இலங்கையில் நடத்துவதற்கு எமக்குக் கிடைத்த அங்கீகாரமானது, கடந்த மூன்று தசாப்த காலமாக இலங்கையில் தலைவிரித்தாடிய பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டுவதில் எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செலுத்திய சிறந்த தலைமைத்துவத்துக்குக் கிடைத்த பரிசாகும் என்று வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்தார். கடந்த மாதம் ட்ரினிடாட் டுபெகோவில் இடம்பெற்ற பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொண்டு அங்கு ஆராயப்பட்ட விடயங்கள் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கப்படுத்தும் செய்தியாளர் சந்திப்பு நேற்று திங்கட்கிழமை முற்பகல் கொழும்பிலுள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் இடம்பெற்றபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அமைச்சர் தொடர்ந்தும் உரை நிகழ்த்துகையில்,

இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதன்முதலாக எதிர்வரும் 2013 ஆம் ஆண்டு பொதுநலவாய நாடுகளின் மாநாடு எமது நாட்டில் நடைபெறவுள்ளது. இலங்கை இந்த மாநாட்டை நடத்துவதற்கு பொருத்தமான நாடாக இருப்பதனாலேயே இதற்கான இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு நடத்தும்படி முதலில் கோரிக்கை விடுத்த போதிலும் இலங்கையில் மனித உரிமை மீறல் இடம்பெற்றதாகவும் அதனால் அதற்கு தாம் ஆதரவு வழங்க முடியாதெனவும் அவுஸ்திரேலிய மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தன.

எனினும் அதற்கு நாம் பதிலாக நாம் ஒரு போதுமே குடி மக்களுக்கு எதிராக யுத்தத்தினையோ அல்லது இன வன்முறைகளிலோ ஈடுபடுவில்லையெனவும் நாம் தொடுத்த போரானது புலிப் பயங்கரவாதிகளுக் எதிராகவேயன்றி பொதுமக்களுக்கானது அல்ல என்பதை ஆணித்தரமாக வலியுறுத்தியிருந்தோம். அதன்படி 2011 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவிலும் 2013 ஆம் ஆண்டில் இலங்கையிலும் 2015 ஆம் ஆண்டில் மொரீஷியஸ் நாட்டிலும் நடத்துவதற்கு ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டது.

அந்த வகையில் எதிர்வரும் 2013 ஆம் ஆண்டில் இலங்கையில் இடம்பெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் 53 உறுப்பு நாடுகளின் முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

பொதுநலவாய நாடுகளில் ஆபிரிக்கா, ஆசிய, பசுபிக், கரிபியன் தீவுகள், தெற்காசியா உட்பட மேலும் பல பிராந்திய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இம்முறை மாநாட்டில் கால நிலை மாற்றம், உறுப்பு நாடுகளில் பயங்கரவாதத்தினை ஒழித்துக் கட்டல், ஜனநாயகத்தை நிலைநாட்டுதல், பொருளாதார மேம்பாடு இளைய தலைமுறையினருக்கான எதிர்காலம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டன. இலங்கை ஏனைய நாடுகளுடன் சிறந்த நட்புறவினைப் பேணி வரும் நாடு. இதனை பொதுநலவாய நாடுகளும் ஏற்றுக் கொண்டன. இப்போது எமக்குக் கிடைத்த இந்த வெற்றியினை எம்மவர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வெளிநாடுகளில் உள்ள வர்த்தக பிரமுகர்கள் இங்கு வந்து வர்த்தகத் துறையில் ஈடுபடவும் புதிய புதிய முதலீடுகளில் இறங்கவும் இங்கு கதவுகள் திறந்து விடப்பட்டிருக்கின்றன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக