8 டிசம்பர், 2009





மட்டக்களப்பு கல்குடா கடற்கரையிலிருந்து சட்ட விரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்வதற்கு முயன்ற நபரொருவர் முதலையினால் இழுத்துச் செல்லப்பட்டு மூன்றாம் நாளான நேற்றிரவு சடலமாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்.

சம்பவதினமான கடந்த சனிக்கிழமை அவுஸ்திரேலியாவுக்கு சட்ட விரோத பயணத்தை மேற்கொள்வதற்காக கல்கடா கடற்கரையில் குறித்த நபர்கள் இன்னும் சிலருடன் நின்று கொண்டிருந்த வேளை இராணுவத்தின் நடமாட்டததைக் கண்டு தப்பியோட முயற்சித்துள்ளனர். அவ்வேளையில் இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். துப்பாக்கிப் பிரயோகத்துக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்தார்.

தப்பிச்செல்ல முயன்ற இருவர் அதன்போது அந்த பகுதியிலுள்ள நீரோடையொன்றில் தவறி விழுந்துள்ளனர்.அவர்களில் ஒருவர் முதலைக்கடிக்கு உள்ளாகி வாழைச்சேனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். நீரோடையில் முதலையினால் கவ்விப் பிடிக்கப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டு மூன்றாம் நாள் சடலமாக கண்டு பிடிக்கப்பட்ட நபர் பெரியகல்லாற்றைச் சேர்ந்த மனேகரன் வினோதன்வயது 31 ) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக