19 டிசம்பர், 2009

வெளிநாட்டில் தஞ்சம் புகும் நடவடிக்கையில் இந்தோனேசியாவில் தடுக்கப்பட்டிருந்த இலங்கை அகதிகள்

இந்தோனேசிய வரைப்படம்
இந்தோனேசிய வரைப்படம்

ஆஸ்திரேலிய சுங்க இலாகா கப்பலில் கிட்டதட்ட ஒருமாத காலமாக தங்கியிருந்த 15 இலங்கை அகதிகள் இந்தோனேசியாவில் இருந்து வெளிநாடுகளில் தஞ்சம் புகும் வேலைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவுக்கு செல்லும் இவர்கள் அங்கிருந்து வேறு மூன்று நாடுகளுக்கு செல்வார்கள் என்று இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்களுக்கு ஆஸ்திரேலியா மற்றும் கனடாவில் தஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்தோனேசியா அருகே சர்வதேச கடல் எல்லையில் இலங்கை அகதிகள் பயணித்த கப்பலில் சிக்கலில் மாட்டிய போது அவர்களை ஆஸ்திரேலிய கப்பல் மீட்டிருந்தது.

கப்பலில் இருந்த 78 பேரும் ஐ.நாவால் அகதிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக