19 டிசம்பர், 2009


குழந்தை உடம்பில் 42 தையல் ஊசி




Swine Flu

ரியோ டி ஜெனிரோ : பிரேசிலில் 2 வயது குழந்தையின் உடலில் 42 தையல் ஊசிகளை செலுத்திய கொடூர மனிதர் கைது செய்யப்பட்டார். குழந்தையின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இபோடிரமா என்ற நகரைச் சேர்ந்த பெண் மரியா டிசோசா. அவரது 2வது கணவர் ராபர்ட் மகால்ஹேஸ். மரியாவுக்கு முதல் கணவன் மூலம் 2 வயதில் குழந்தை உள்ளது. கடந்த சில நாட்கள் முன், கடும் வலியால் துடித்த குழந்தையை மருத்துவமனைக்கு தாய் தூக்கிச் சென்றார்.
ஸ்கேன் செய்து பார்த்ததில் குழந்தையின் உடலுக்குள் கழுத்து முதல் கால் வரை தையல் ஊசிகள் செலுத்தப்பட்டு இருந்தது தெரிந்தது. எக்ஸ்ரேவில் எண்ணியபோது மொத்தம் 42 ஊசிகள் தெரிந்தன. அவற்றில் 2 ஊசிகள், குழந்தையின் இதயம் அருகே அபாயகரமாக இருந்தன.
மற்றவை கழுத்து, அடிவயிறு, நுரையீரல்கள், கால்களுக்குள் இருந்தன. குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்து ஊசிகளை அகற்ற முதலில் டாக்டர்கள் திட்டமிட்டனர். ஆனால், அது குழந்தையின் உயிருக்கு ஆபத்து என்பதால் கைவிட்டனர். மாறாக வேறு மருத்துவ வழிகளை ஆராய்ந்து வருகின்றனர். மரியா தெரிவித்த சந்தேகத்தின் அடிப்படையில் ராபர்ட் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர், குழந்தை உடலில் ஊசிகளை செலுத்தியதை ஒப்புக் கொண்டார். இதற்கு பின்னணியில் மதரீதியான ஒரு பெண்ணும், சூனியக்கார பெண் ஒருவரும் உதவியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக