13 நவம்பர், 2009


ராணுவப் புரட்சி ஏற்படும் என ராஜபட்ச அஞ்சினார்: பொன்சேகா


இலங்கையில் ராணுவத்தின் மூலம் தாம் ஆட்சியைப் பிடிக்கக்கூடும் என அச்சத்தாலேயே தம்மை ராணுவத் தளபதி பதவியில் இருந்து ராஜபட்ச நீக்கியதாக சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ராணுவம் ஈடுபட்டால் உதவ வேண்டும் என இந்தியாவிடம் ராஜபட்ச கோரியிருந்ததாகவும் பொன்சேகா தெரிவித்திருக்கிறார்.விடுதலைப் புலிகளுடனான போருக்குப் பிறகு ராணுவத் தளபதி பதவியில் இருந்து விடுவிக்கப்பட்ட பொன்சேகா, முப்படைத் தளபதி என்ற கௌரவப் பொறுப்புக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், இந்தப் பதவியிலிருந்து நேற்று அவர் ராஜிநாமா செய்துள்ளார்.அரசுக்கு அவர் எழுதிய ராஜிநாமா கடிதத்தில், பல்வேறு அமைப்புகளின் தவறான வழிகாட்டலால், ராணுவம் ஆட்சியைப் பிடிக்கக்கூடும் என்கிற முடிவுக்கு ராஜபட்ச வந்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றிகரமாகச் செயல்பட்ட ராணுவத்தை இப்படிச் சந்தேகக் கண்ணுடன் பார்ப்பது தம்மை வருந்தச் செய்திருப்பதாகவும் அந்தத் கடிதத்தில் பொன்சேகா தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக