14 நவம்பர், 2009

யாழ்ப்பாணத்திற்கு எவ்வித பாதுகாப்பு அனுமதியுமின்றி பயணிக்க அனுமதி-

யாழ்ப்பாணத்திற்கு எவ்விதமான பாதுகாப்பு அனுமதியுமின்றி பஸ்களில் பயணிகள் செல்லக்கூடிய அனுமதி கிடைத்துள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். இந்த நடைமுறை இன்று அல்லது நாளை அமுலுக்கு வருமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ். மாவட்டத்திற்கு செல்லுகின்ற பயணிகள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து, பாதுகாப்பமைச்சின் அனுமதியுடன் செல்லவேண்டிய தேவை இதுவரை காலமும் காணப்பட்டது. தற்போது ஜனாதிபதியின் விசேட பணிப்புரையின்கீழ் பாதுகாப்பு செயலர் கொழும்பிலிருந்து நேரடியாக யாழ்ப்பாணம் செல்வதற்கான பயண அனுமதியை வழங்கியுள்ளார். இன்றிலிருந்து அல்லது நாளையிலிருந்து இந்த நடைமுறை அமுலுக்கு வரவுள்ளது. எனவே பிரயாணிகள் எவ்வித பிரச்சினையுமின்றி, எந்தவித முன் அனுமதியுமின்றி தங்களுடைய பிரயாணத்தை மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும் எனவும் வவுனியா அரசஅதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக