24 நவம்பர், 2009

அவுஸ்திரேலியா சென்றுகொண்டிருந்த இரு படகுகள் இலங்கைக்
கடற்படையினரால் மீட்பு


அவுஸ்திரேலியாவுக்குச் சென்று கொண்டிருந்த இரு மீன்பிடிப் படகுகளை இலங்கைக் கடற்படையினர் தென்பகுதி மிரிஸ்ஸ ஆழ்கடலில் வைத்து நேற்றிரவு கைப்பற்றியுள்ளனர். இதன்போது படகுகளிலிருந்து 60பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் காலி துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டு விசாரணைகள் நடத்தப்படுவதாக கடற்படைப் பேச்சாளர் அத்துலத் சேனாரத் தெரிவித்துள்ளார். இவர்கள் சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களுக்கு பெருந்தொகை பணத்தைச் செலுத்தி அவுஸ்திரேலியாவுக்குச் செல்லும் முயற்சியை மேற்கொண்டதாக அவர் கூறியுள்ளார். இதேவேளை இன்றுஅதிகாலை மேலும் இரு படகுகளில் சுமார் 40பேர்வரை தென்பகுதி கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்டதாகவும் இந்தவகையில் இருநாட்களில் 100பேர் வரையில் இவ்வாறு கைதுசெய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக