24 நவம்பர், 2009

எதிர்வரும் தேர்தலில் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகும் உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பிலான அறிவித்தல்-

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மாவட்ட ரீதியாக நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகும் உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றினை வெளியிட்டுள்ளார். இதன்படி கொழும்பு மாவட்டத்திற்காக தெரிவாகும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 20இலிருந்து 19ஆக குறைக்கப்பட்டுள்ளது. அநுராதபுரம் மாவட்டத்திற்கான எண்ணிக்கை 08இலிருந்து 09ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏனைய மாவட்ட உறுப்பினர் எண்ணிக்கையில் மாற்றங்கள் செய்யப்படவில்லை. கம்பஹாவிலிருந்து 18உறுப்பினர்களும், களுத்துறையிலிருந்து 10பேரும், கண்டியிலிருந்து 12பேரும், மாத்தளையிலிருந்து 05பேரும், நுவரெலியாவிலிருந்து 07பேரும், காலியிலிருந்து 10பேரும், மாத்தறையிலிருந்து 08பேரும், அம்பாந்தோட்டையிலிருந்து 07பேரும், யாழ்ப்பாணத்திலிருந்து 09பேரும், வன்னியிலிருந்து 06பேரும், மட்டக்களப்பிலிருந்து 05பேரும், திகாமடுல்லயிலிருந்து 07பேரும், திருமலையிலிருந்து 04பேரும், குருநாகலிலிருந்து 15பேரும், புத்தளத்திலிருந்து 08பேரும், பொலநறுவையிலிருந்து 05பேரும், பதுளையிலிருந்து 08பேரும், மொனறாகலையிலிருந்து 05பேரும், இரத்தினபுரியிலிருந்து 10பேரும், கேகாலையிலிருந்து 09பேரும் நாடாளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்படவுள்ளதாக விசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக