23 நவம்பர், 2009

மாவீரர்,போராளிகளின் அர்ப்பணிப்புக்களை கொச்சைப்படுத்தாதீர்



மாவீரர்,போராளிகளின் அர்ப்பணிப்புக்களை கொச்சைப்படுத்தாதீர் என்ற தலைப்பில் கனடாவில்புளொட் துண்டுபிரசுரம்! கனடாவின் ரொறன்ரோ, மொன்றியல் மாநிலங்களில் புளொட்இயக்கத்தின் கனடா கிளையினரால் துண்டு பிரசுரம் ஒன்று வினியோகம் செய்யப்பட்டுள்ளதாகதெரியவருகின்றது. போராட்டம் என்ற பெயரில் கனடாவில் மேற்கொள்ளப்படும் வியாபாரநடவடிக்கைகளை கண்டித்தும் அதற்காக தம்முயிர்களை அர்ப்பணித்துள்ள மாவீரர்கள்,போராளிகளின் தியாகங்களை கொச்சைப்படுத்த வேண்டாம் என்றும் அவ் துண்டு பிரசுரத்தில்தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் நேற்று சனிக்கிழமை மாலைவரை10,000க்கு மேற்பட்ட பிரதிகள் வரை விநியோகம் செய்யப்பட்டதாகவும், இதனைபொதுமக்களும், வர்த்தகர்களும் ஆர்வத்துடன் வாங்கி தமது ஆதரவினை புளொட்இயக்கத்தினருக்கு வழங்கியுள்ளதுடன், கடந்த காலங்களில் போராட்டம் என்ற பெயரில்ஏமாற்றப்பட்டதையும் அவ் மக்கள் கண்ணீர் மல்க நினைவுமீட்டதுடன், போராட்டம் என்றபெயரில் பணவசூலிப்பு செய்தவர்கள் பற்றியும் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.இந்து ஆலயங்கள், தமிழ்வர்த்தக நிலையங்கள், தேவாலயங்கள் போன்ற பகுதிகளில்கணசமான புளொட் உறுப்பினர்கள் பரவலாக நின்று துண்டுபிரசுரங்களை நேரடியாகவேமக்களின் கைகளில் கொடுத்ததை காணமுடிந்தது. இவ்வாறு துண்டுபிரசுரம் வினியோகம்
செய்யப்பட்டதை கண்ட தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் தனது வாழ்த்துக்களை பிரசுரம்வினியோகம் செய்து கொண்டிருந்த புளொட் உறுப்பினர்களுக்கு தெரிவித்ததுடன், இவ்நடவடிக்கையானது கனேடிய மண்ணில் தமிழ் மக்கள் மத்தியில் ஜனநாயக மாற்றம்காணப்படுவதற்கு ஒர் எடுத்துக்காட்டு என்றும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக