23 நவம்பர், 2009

ஆராய்ச்சி மற்றும் மேற்பாட்டு கழக வட்டாரங்கள் தெரிவித்தன.General India news in detail

பாலாசூர் : அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ள அக்னி-2 ஏவுகணைச் சோதனையை முதல் முறையாக இரவு நேரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம் பாட்டு கழக வட்டாரங்கள் கூறியதாவது: அணு ஆயுதங்களை ஏந்திச் சென்று இலக்கை தாக்கக் கூடிய வகையிலான அக்னி-2 ஏவுகணை வடிவமைக்கபட்டுள்ளது.



இதற்கான அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ளன. இது குறித்த சோதனை நடத்துவதற்கான இறுதிக் கட்ட பணிகள் நடந்து வருகின்றன. இந்த ஏவுகணை, 2,000 கி.மீ., தொலைவில் உள்ள இலக்கை தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு டன் எடையுள்ள வெடி பொருட்களை தாங்கிச் செல்லும் திறன் உடையது. இந்த ஏவுகணைச் சோதனை முதல் முறையாக இரவு நேரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேற்பாட்டு கழக வட்டாரங்கள் தெரிவித்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக