23 நவம்பர், 2009

தேர்தல் தொடர்பில் ஜனாதிபதியின் அறிவிப்பு இன்று வெளியிடப்படும்


தேர்தல் முதலில் நடைபெறும் என்பது தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அறிவிப்பு இன்று திங்கட்கிழமை நள்ளிரவில் வெளியாகும் என்று தெரிய வருகிறது. பெரும்பாலும் முதலில் ஜனாதிபதித் தேர்தலே நடத்தப்படும் என்றும் எதிர்வரும் ஜனவரி மாதம் 23 ஆம் திகதி தேர்தல் நடைபெறலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், தேர்தல் தொடர்பான ஜனாதிபதியின் அறிவிப்பின் பின்னர் தேர்தல் நடைபெறும் தினம் மற்றும் வேட்பு மனுத் தாக்கல் தொடர்பான விபரங்களை தேர்தல்கள் ஆணையாளர் வெளியிடுவார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

எந்தத் தேர்தல் முதலில் நடைபெறும் என்பது தொடர்பான அறிவிப்பு கடந்த 15 ஆம் திகதி நடைபெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய சம்மேளனத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டபோதும் சம்மேளனத்தில் அறிவிக்கப்படவில்லை. அதேவேளை கடந்த வாரம் ஆளும் கட்சியின் அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் அமைப்பாளர்களை சந்தித்து பேச்சு நடத்திய ஜனாதிபதி விரைவில் பிரதான தேர்தல் ஒன்றுக்கு தயாராகுமாறு கோரியிருந்தார். அதனையடுத்தே இன்று திங்கட்கிழமை தேர்தல் தொடர்பான அறிவிப்பு இடம்பெறும் என்று தெரிவிக்கப்படுகின்றது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக