1 நவம்பர், 2009

ஜக்சினின் ஆவியுடன் பிரபல உளவியல் திறனாளியான ஜேன் வலஸ் உரையாடல்



அடிமையானமைதான் தனது மரணத்திற்கு காரணம் என பிரபல பொப்பிசைப் பாடகர் மைக்கிள் ஜக்சனின் ஆவி தெரிவித்ததாக பிரபல உளவியல் திறனாளியான ஜேன் வலஸ் நடத்திய ஆவியுடனான உரையாடல் நிகழ்ச்சியின் பின்னர் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வானது லன்டனில் கடந்த வெள்ளிக்கிழமையிரவு 10 மணி முதல் 12 மணிக்கிடையிலான நேரத்தில் ஆவிகளுடன் உரையாடும் இணையத்தளம் வாயிலாக இடம்பெற்றுள்ளது.

உங்கள் மரணத்திற்கு யார் பொறுப்பாளி என ஜேன் வினவியபோது, அதற்கு ஜக்சனின் ஆவி, எவரும் பொறுப்பல்ல. மருந்துகளை நான் மிதமிஞ்சி பாவிப்பது குறித்தும் அதனால் எதிர்கொள்ளக்கூடிய எதிர்மறையான விளைவுகள் குறித்தும் பலதடவை எச்சரிக்ககை செய்யப்பட்டேன்.

எனினும் நோயின் உக்கிரம் தாங்க முடியாததாலும் மருந்துகளின்றி உயிர்வாழ முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டு விட்டதாலும் மருத்துவர்களின் எச்சரிக்கைகளை பொருட்படுத்தவில்லை எனக் கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் அவரது திஸ் இஸ் இட் என்ற திரைப்படம் வெளியானதையிட்டு ஜக்சன் மகிழ்ச்சி தெரிவித்ததாகவும், தான் பல முகங்களை கொண்டதோர் மனிதனாகவே வாழ்ந்ததால் உண்மையான தனது முகத்தை தானே ஒருபோதும் அறிந்திருக்கவில்லை எனக் கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக