16 அக்டோபர், 2009

இடைத்தங்கல் முகாம்களில் இருந்து 1700 பேர் சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைப்பு



வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் உள்ள இடம்பெயர்ந்தோருக்கான முகாம்களில் இருந்து வியாழக்கிழமை 1700 பேர் அவர்களின் சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வவுனியா மனிக்பாமிலிருந்து 1220 பேர் யாழ் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அதேவேளை, யாழ் குடாநாட்டில் உள்ள இடைத்தங்கல் முகாம்களில் இருந்து வவுனியா, மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த 500 பேர் அந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள்.

வவுனியா மன்னார் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்கள் வவுனியாவில் கொண்டு வந்து இறக்கிவிடப்பட்டதையடுத்து, அவர்கள் தமது இடங்களுக்கு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டவர்கள் துரையப்பா விளையாட்டரங்கில் இறக்கிவிடப்பட்டதையடுத்து, அங்கிருந்து அவர்கள் தமது வீடுகளுக்குப் புறப்பட்டுச் செல்ல ஆரம்பித்துள்ளதாக அதிகார்கள் தெரிவித்துள்ளனர்.

மாரிகாலம் நெருங்குவதையடுத்து, வவுனியா முகாம்களில் இருப்பவர்களை சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அடுத்த 15 தினங்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை அனுப்பி வைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நாளாந்தம் இவர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என தெரிகின்றது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக