25 ஆகஸ்ட், 2009

கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் குற்றவியல் நீதிமன்றங்கள் நிறுவ நடவடிக்கை-




கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் குற்றவியல் நீதிமன்றங்கள் நிறுவப்படவிருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த மாவட்டங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு முன்னதாக இந்த குற்றவியல் நீதிமன்றங்களை நிறுவுவதற்கு நீதியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் மேல்நீதிமன்றம் ஒன்றும், நீதவான் நீதிமன்றம் ஒன்றும் நிறுவப்படவுள்ளதுடன், முல்லைத்தீவில் நீதவான் நீதிமன்றமொன்றும் நிறுவப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் வழக்கு விசாரணைகள் வவுனியா மாவட்ட நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக