25 ஆகஸ்ட், 2009

வந்தாறுமூலை பல்கலைக்கழக பகுதியிலிருந்து குண்டுகள் மீட்பு-

மட்டக்களப்பு, வந்தாறுமூலையிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பின் புறத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட மூன்று கைக்குண்டுகள் நேற்று படையினரால் வெடிக்கவைத்து செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன. இக்குண்டுகள் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டிருக்கலாமென படையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இக்குண்டுகள் பொலித்தீன் பையொன்றினுள் போடப்பட்டு புதைக்கப்பட்டிருந்தன. சுற்றாடல் துப்புரவு செய்வதில் ஈடுபட்டிருந்த பல்கலைக்கழக ஊழியர்கள் இதுகுறித்து அறிவித்ததைத் தொடர்ந்தே குண்டுகள் மீட்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக