25 ஆகஸ்ட், 2009

இந்திய, பிரித்தானிய கடற்படையினர் சிறிய போர்ப்படகுகளை இயக்குவதற்கான பயிற்சிகளை வழங்குமாறு இலங்கையிடம் கோரிக்கை-



இந்தியா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளின் கடற்படையினர் சிறிய போர்ப் படகுகளை இயக்குவதற்கான பயிற்சிகளை வழங்குமாறு இலங்கையிடம் கோரியுள்ளதாக த எக்ஸ்பிரஸ் பஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. புலிகளுக்கு எதிரான நான்காம் கட்ட போரின்போது இலங்கைக் கடற்படையினர் வெற்றிகரமாக போர்ப் படகுகளைப் பயன்படுத்தியமையை அடுத்தே இந்தக் கோரிக்கைகள் எழுத்திருப்பதாக இலங்கை கடற்படை அதிகாரியைச் சுட்டிக்காட்டி அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது. இலங்கையில் அமெரிக்காவின் கடற்படைக் குழுவொன்று சிறிய போர்ப் படகுகளை பயன்படுத்தும் பயிற்சியினை கிழக்குப்புறப் பகுதியில் மேற்கொண்டு வருவதாக அவ்ஊடகம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை இதற்கு முன்னர் பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகளுக்கு ஆறு வாரகால குறுங்கால இராணுவப் பயிற்சிகளை வழங்குவதற்கு இலங்கை இணக்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக