31 ஆகஸ்ட், 2009

மீள்குடியேற்றம் தாமதப்படுகின்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து திருவண்ணாமலையில் ஆர்ப்பாட்டம்-

வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களை மீள்குடியமர்த்தும் பணியில் தாமதம் ஏற்பட்டு வருகின்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழகம் திருவண்ணாமலையில் ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தினை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்பாடு செய்திருந்தது. இதன்போது இலங்கையில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் அனைவரும் தாமதமின்றி மீள்குடியமர்த்தப்பட வேண்டுமென கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கையில் நீண்டகாலமாக காணப்படுகின்ற இனப்பிரச்சினைக்கு சரியான அரசியல் தீர்வொன்று முன்வைக்கப்பட வேண்டுமென்றும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக