31 ஆகஸ்ட், 2009

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் பாரிய ரயில் மறியல் போராட்டம்-

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் எதிர்வரும் 2ம் திகதி பாரிய ரயில் மறியல் போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திராவிடர் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மறியல் போராட்டத்திற்கு அதன் தலைவர் வீரமணி தலைமை தாங்குவாரென்றும் கூறப்படுகின்றது. தமிழகம், விழுப்புரம் கள்ளக்குறிச்சியில் நேற்றையதினம் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே வீரமணி இதனைத் குறிப்பிட்டுள்ளார். இலங்கைத் தமிழர்களுக்கான உரிமைகள் வழங்கப்பட்டு அவர்கள் முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட வேண்டுமென்பதை வலியுறத்தியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக