3 ஜூலை, 2011

நிபுணர் குழுவின் பரிந்துரைகளை பான் கீ மூன் ஏற்றுக் கொண்டாராம்: பர்ஹான் ஹக்

இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் குறித்த பரிந்துரையை ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஏற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் இதனைத் தெரிவித்துள்ளார். இன்னர் சிற்றி பிரஸ் ஊடகத்திற்கு நேற்று முன்தினம் அளித்த செவ்வியின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இறுதிக் கட்ட போரின் போது ஐக்கிய நாடுகள் அமைப்பினர் கிளிநொச்சியிலிருந்து வெளியேறியமை, சேத விபரங்களை வெளியிடாமை போன்ற விடயங்கள், சர்வதேச சட்டங்களுக்கு அமைய, தமிழீழ விடுதலைப்புலிப் போராளிகள் சரணடைய பான் கீ மூனின் பிரதம அதிகாரி விஜய் நம்பியார் வழங்கியதாக கூறப்படும் உறுதி, அதன் பின்னர் சரணடைந்தவர்கள் கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான பரிந்துரையே அதுவாகும் என்று பர்ஹான் ஹக் குறிப்பிட்டார்.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் இந்த விடயங்கள் குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் தெரிவிக் கப்படுகின்றது.

அத்துடன் ஐக்கிய நாடுகளின் ஏனைய முகவர் நிறுவனங்களிடமும் நிபுணர் குழு அறிக்கை பற்றி கலந்தாலோசிக்கப்பட்டு வரு கிறது. இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பான் கீ மூனை நாளை மறுதினம் 5ஆம் திகதி சந்திப்பார் என்றும் பர்ஹான் ஹக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக