3 ஜூலை, 2011

இலங்கையின் யுத்தக் குற்றச்சாட்டை ஐ.நா. சபை விசாரிக்க வேண்டும்: ம.ம.ச.க

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக்குற்றச்சாட்டு மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும் என மலேஷிய அரசியல் கட்சி ஒன்று கோரிக்கை விடுத்துள்ளது. மலேஷிய மக்கள் சக்தி கட்சியே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அந்த கட்சியினர் மலேஷியாவிலுள்ள ஐ.நா பணியகத்திடம் மனுவொன்றை கையளித்துள் ளனர்.

ஐ.நா சபையின் நிபுணர் குழு அறிக்கை யின்படி இலங்கை மீது அனைத்துலக குற்ற வியல் நீதிமன்றம் விசாரணைனகளை மேற் கொள்ள வேண்டும் என அந்த கட்சியின் பொதுச் செயலாளர் ஆர். கண்ணன் தெரிவித் துள்ளார்.

மலேஷியா இலங்கையில் முதலீடுகளை செய்துள்ள ஒரு நாடாகும். இதனால் இலங்கை யிலுள்ள தமிழ் மக்கள் சுதந்திரமாகவும் அவர்களுக்குரிய உரிமையுடனும் வாழுவ தற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண் டும் என மலேஷிய அரசாங்கம் வலியுறுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பலஸ்தீனத்தில் இடம்பெற்ற யுத்தக்குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் ஐ.நா சபை விசாரணைகளை மேற்கொள்ள வேண் டும் என மலேஷிய மக்கள் சக்தி கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக