6 ஜூன், 2011

கொக்காவில் தொலைத் தொடர்புக் கோபுரம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு



தெற்காசியாவில் அதியுயரமான கொக்காவில் தொலைத் தொடர்புக் கோபுரம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் இன்று முற்பகல் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

வன்னி, கொக்காவில் தொலைத்தொடர்புக் கோபுரம் 450 மில்லியன் ரூபா செலவில் புனர் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தொலைத் தொடர்புக் கோபுரத்தினூடாக வட மாகாணத்திற்கான தொலைக்காட்சி வானொலி மற்றும் தொலைபேசிச் சேவைகள் வழங்கப்படவுள்ளன.

சுமார் 174 மீற்றர் உயரமான இந்தத் தொலைத் தொடர்புக் கோபுரத்தின் மூலம் தொலைக்காட்சிச் சேவைகளை வழங்குவதற்காக நிறுவனங்கள் சில விண்ணப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக