30 ஜூன், 2011

மலேசிய கடத்தல் கும்பலிடம் இருந்து 6 இலங்கையர்கள் மீட்பு

மலேசியாவில் மனிதக் கடத்தல் கும்பல்களிடமிருந்து 6 இலங்கையர்களை மீட்டுள்ளதாக மலேசிய குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜாலன் வோங் அஹ் பூக் நகரிலுள்ள ஹோட்டலொன்றை நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டபோது இலங்கையர்களான 6 ஆண்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் கைது செய்யப்பட்ட மனிதக் கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய ஒருவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் இந்த முற்றுகை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உள்ளூரைச் சேர்ந்த முகவரான இந் நபர் தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொடுப்பதற்காக மேற்படி இலங்கையர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் தலா 5000 மலேசிய ரிங்கிட் பணம் அறவிட்டதாக பிரதி உதவி குடிவரவுப் பணிப்பாளர் கஜேந்திரா பஹதூர் கூறியுள்ளார்.

இந்த இலங்கையர்கள் சட்டபூர்வமாக மலேசியாவுக்கு வந்த போதிலும் அவர்களின் கடவுச்சீட்டு காலாவதியாகியுள்ளதாக அவர் கூறினார். மேற்படி இலங்கையர்கள் மலாக்காவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக