20 மே, 2011

வெள்ளைக் கொடி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு எதிரான வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பிலான வழக்கை கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் இன்று மீண்டும் ஒத்திவைத்துள்ளது.

வழக்கு விசாரணை இன்று இடம்பெற்றபோது முன்னாள் இராணுவத் தளபதியின் உடல்நிலை தொடர்பிலான மருத்துவ அறிக்கையொன்றை சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.

அந்த அறிக்கையில் சரத் பொன்சேகாவின் உடல் நிலை இதுவரை தேறாமையினால் அவருக்கு இரண்டு வாரங்கள் ஓய்வு தேவை என பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இதற்கமைய வழக்கை இம்மாதம் 23 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதற்கு நீதிபதிகள் தீர்மானித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக