20 மே, 2011

இரு அமெரிக்கப் பிரஜைகள் விமானநிலையத்தில் கைது

அமெரிக்காவுக்கு செல்லவிருந்த விமானத்தின் மூலம் துப்பாக்கியொன்றை கொண்டு செல்ல முயற்சித்த இரு அமெரிக்கர்களை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸார் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு கைது செய்துள்ளனர்.

பிஸ்டல் போன்ற துப்பாக்கியொன்றை பாகங்களாக பிரித்து கொண்டு செல்ல முயற்சித்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாங்கள் அமெரிக்க இராணுவத்தை சேர்ந்தவர்கள் எனவும் விடுமுறையை கழிக்க இலங்கை வந்ததாகவும் அவர்கள் தெரிவித்ததாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறித்த பொருள் ஸ்கேனர் இயந்திரத்தில் தெரிந்தவுடனேயே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மேலதிக விசாரணைகளுக்காகக் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக