20 மே, 2011

வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகள் சிலர் ஆர்ப்பாட்டம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்பட்ட பொது மன்னிப்பின் கீழ் தாம் விடுதலை செய்யப்படாததை ஆட்சேபித்து கைதிகள் சிலர் கூரை மீது ஏறி எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆயுள் கைதிகள் ஏழு பேரே இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் வீ.ஆர்.டி.சில்வா தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக