5 ஏப்ரல், 2011

சன் சீ கப்பல் குடியேற்றவாசிகளை தடுக்கும் வாய்ப்பை கனடா தவறவிட்டது

இலங்கை தமிழர்கள் சுமார் 500 பேருடன் கடந்த வருடம் கனடாவை சென்றடைந்த எம்.வி. சன் சீ கப்பலை தடுத்து நிறுத்தக்கூடிய பல வாய்ப்புக்களை கனடாவும் அதன் தோழமை நாடுகளும் தவறவிட்டிருந்ததாக கனடாவின் நெஷனல் போஸ்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

அப்பத்திரிகை மேற்கொண்ட ஆய்வின் மூலமே இந்தத் தகவல் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அப்பத்திரிகை மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

எம்.வி. சன் சீ கப்பல் தாய்லாந்து வளைகுடாவில் இருப்பதாக அவுஸ்திரேலியா விலிருந்து புலனாய்வுத் தகவல்கள் கடந்த வருடம் மே 9 ஆம் திகதி கிடைத்தன. ஆனால், தாய்லாந்து கடல் எல்லைக்கு அப்பால் கப்பல் இருந்ததால் அக்கப்பல் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டது.

அதன்பின் மே மாத இறுதியில் கம்போடிய கடற்பரப்பில் அக்கப்பல் இயந்திரக் கோளாறுக்குள்ளானது அவ்வேளையில் கம்போடியாவின் உதவியை கனடா கோரியது எனினும் கம்போடிய அரசாங்கம் அக்கப்பலை தடுக்கவில்லை .

இந்நிலையில் அகதிகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகராலயம் கப்பல் பயணியொரு வரிடமிருந்து பக்ஸ் கடிதமொன்றை பெற்றுள்ளது. நூற் றுக் கண க்க க்ஷி ன பயணி களுடன் இக்கப்பல் கனடாவுக்குச் சென்றுகொண்டிருப்பதாகவும் அது இயந் திர கோளாறுக்குள்ளானதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த து.

எனினும் அக்கடிதத்தின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்த மேற்படி ஐ.நா. முகவரமைப்பினால் முடியக்ஷிமல் போனது.

ஒழுங்கமைக்கப்பட்ட மனித கடத்தல் வரலாற்றில் மிக மோசமான இரகசியம் பேணப்பட்டதொன்றாக இக்கப்பல் இருக்கலாம். ஆனால், இக்கப்பல் ஆபத்து மிக்க பசுபிக் சமுத்திரத்தில் வைத்து தடுக்கும் பல வாய்ப்புகள் இழக்கப்பட்டன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக