12 பிப்ரவரி, 2011

பரசூட் விபத்து இராணுவ வீரர் பலி




வேருவில இராணுவப் பாதுகாப்பு நிலையத்தில் இராணுவ வீரர் ஒருவர் பரசூட் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது நேற்று காலை 10.30 மணியளவில் பலியாகியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் உபய மெதவல தெரிவித்தார்.

அனுபவமிக்க இவ்வீரர் 8000 அடி உயரத்திலிருந்த பரசூட் மூலம் குதித்த போது பரசூட்டின் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இவ்விபத்து இடம்பெற்றதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.

சம்பவத்தின் போது அவ்வீரர் வேருவில நீர்த்தாங்கியில் மோதுண்டு காயமடைந்து பின்னர் இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பலியான இராணுவ வீரர் மீதான பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக