12 பிப்ரவரி, 2011

புறக்கோட்டையில் பதுக்கப்பட்டிருந்த 12 ஆயிரம் கிலோ அரிசி கண்டுபிடிப்பு





நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை நேற்று புறக்கோட்டை 4ஆம் குறுக்குத் தெருவில் செய்த சோதனை நடவடிக்கையின் போது பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12,000 கிலோ அரிசி கைப்பற்றப்பட்டது. பதுக்கி வைக்கப்பட்டுள்ள அரிசியை தேடிக் கண்டுபிடிக்கும் பணியில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை ஈடுபட்டுள்ளது.

நேற்று முன்தினம் இவ்வாறு நடத்தப்பட்ட தேடுதலின்போது 250 கிலோ அரிசி புறக்கோட்டை பழைய சோனகத்தெருவில் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 9 ஆம் திகதியும் அரிசியை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்த 100 வர்த்தக நிலையங்களையும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை சுற்றிவளைத்தது. நேற்று முன்தினம் இவ்வாறு 110 வர்த்தக நிலையங்கள் சுற்றி வளைக்கப்பட்டதாக வும் கூட்டுறவு அமைச்சு தெரிவிக்கிறது.

மொனராகலை, மாத்தளை, பொலன்னறுவை, கண்டி, கொழும்பு, களுத்துறை, கம்பஹா மாவட்டங்களில் இவ்வாறு அதிகளவு சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக