30 ஏப்ரல், 2010

கிறிஸ்மஸ் தீவுகளில் அகதிகள் ஆர்ப்பாட்டம்



அகதிகள் அந்தஸ்து மறுக்கப்பட்ட 25 பேர் கிறிஸ்மஸ் தீவுகளில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர்.

கிறிஸ்மஸ் தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 25 இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அகதிகளே இவ்வாறு எதிர்ப்பு போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

தமது அகதி அந்தஸ்து மறுக்கப்பட்டதால் புகலிடம் இன்றி ஆத்திரமுற்ற குறித்த அகதிகள் எதிர்ப்பு போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

எதிர்வரும் நாட்களில் மேலும் பல அகதிகளுக்கு அடைக்கலம் மறுக்கப்படலாம் என அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் ஈவன்ஸ் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"அடைக்கலம் மறுக்கப்பட்ட மக்களைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமானது.

ஆப்கானிஸ்தானின் ஹஸ்ரா என்ற சிறுபான்மை இனத்தவர்களே பெரும்பாலும் ஆர்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கே அடைக்கலம் மறுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நிலைமைகள் சுமூகமடைந்து வருவதனால், அவர்களின் புகலிடக் கோரிக்கைகள் நிராகரிக்கப்படலாம். மேலும் அவர்களை மீண்டும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது " என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக