1 பிப்ரவரி, 2010

சரண் அடைந்த விடுதலைப்புலிகள் கொலை: இலங்கை ராணுவத்தை சர்வதேச நாடுகள் புறக்கணித்தன; போர் பயிற்சிக்கு அழைக்கவில்லை




இலங்கையில் விடுதலைப்புலிகளுடன் நடந்த இறுதிக்கட்ட போரின்போது விடுதலைப்புலி அரசியல் தலைவர் நடேசன், தளபதி புலித்தேவன் மற்றும் முக்கிய தளபதிகள் பலர் ராணுவத்திடம் சரண் அடைந்தனர். இலங்கை ராணுவ தளபதிகளிடம் தகவல் கொடுத்து விட்டே வெள்ளை கொடி பிடித்தபடி வந்து சரண் அடைந்தனர்.

ஆனால் அவர்கள் அனைவரையும் இலங்கை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர்.

சர்வதேச விதிப்படி சரண் அடைந்தவர்களை கொல்லக்கூடாது. இதை இலங்கை ராணுவம் மீறியதால் சர்ச்சை எழுந்தது.

சரண் அடைந்த விடுதலைப்புலிகள் ராணுவம் சுட்டுக் கொன்றதை அதிபர் தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் ராணுவ தளபதியும் ஒத்துக்கொண்டார்.

ராஜபக்சே தம்பி கோதபயா ராஜபக்சே உத்தரவால்தான் விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டதாக அவர் வெளிப்படையாக கூறினார்.

ராணுவ தளபதியே இது உண்மை என ஒத்துக்கொண்டதால் இலங்கை ராணுவத்துக்கு சர்வதேச அளவில் கெட்டப்பெயர் ஏற்பட்டுள்ளது.

பல வெளிநாடுகள் இலங்கை ராணுவத்தை தங்களுடன் சேர்ந்து போர் பயிற்சியில் ஈடுபட அழைப்பது வழக்கம். ஆனால் இந்த சம்பவத்தால் இந்த ஆண்டு இலங்கை ராணுவத்தை யாரும் போர் பயிற்சிக்கு அழைக்க வில்லை.

இதுபற்றி ராணுவ செய்தி தொடர்பாளர் உதய நாணயக்காரா கூறும்போது, முன்னாள் ராணுவ தளபதியே குற்றச்சாட்டை கூறியதால் இலங்கை ராணுவத்துக்கு கெட்ட பெயர் ஏற்பட்டு விட்டது. வழக்கமாக ஐரோப்பிய நாடுகள் பல இலங்கை ராணுவத்தை போர் பயிற்சிக்கு அழைக்கும். பொன்சேகா கூறிய குற்றச்சாட்டால் இந்த வருடம் யாரும் பயிற்சிக்கு அழைக்கவில்லை என்றார்.




அமெரிக்கா முதலாளித்துவ நாடு. சீனா கம்யூனிச நாடு. கொள்கை அடிப்படையில் இரண்டுமே இரு துருவங்கள்.



அமெரிக்கா முதலாளித்துவ நாடு. சீனா கம்யூனிச நாடு. கொள்கை அடிப்படையில் இரண்டுமே இரு துருவங்கள். ஆனால் சர்வதேச அரசியலில் அதிகாரம், ராணுவ பலம், வலுவான பொருளாதாரம் போன்ற விஷயங்களில் இரண்டுமே ஒன்றுக்கு ஒன்று போட்டிதான். இந்தப் போட்டி, அடுத்த நாடுகளில் ராணுவ தளங்களை அமைப்பதிலும் வந்துவிட்டது.
உலகிலேயே அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் மட்டும்தான் தங்கள் நாடுகளில் மட்டுமல்லாது மற்ற நேச நாடுகளிலும் ராணுவ தளங்களை வைத்துள்ளன. கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகள் வந்துவிட்ட பிறகு, அந்த ஏவுகணைகளை ஆரம்பத்திலேயே அழிப்பதற்கும் ராணுவ தளங்கள் இருக்கும் நாடுகளின் பாதுகாப்புக்கும் இது அவசியமாகிவிட்டது. இந்த ஆசை இப்போது சீனாவுக்கும் வந்துவிட்டது. பாகிஸ்தானில் ராணுவ தளம் அமைக்கத் திட்டமிட்டுள்ளது சீனா.
சீனாவில் முஸ்லிம்கள் அதிகம் உள்ள உக்கூர் பிராந்தியத்தில் தீவிரவாதப் பிரச்னை இருக்கிறது. தனி நாடு கேட்டுப் போராடி வரும் இந்தப் பகுதி தீவிரவாதிகளின் நடமாட்டத்தை அறிய, பாகிஸ்தானின் எல்லைப் பகுதியில் உள்ள வடமேற்கு மாகாணத்துடன் சீனா ஏற்கனவே ஒப்பந்தம் செய்துள்ளது. இப்போது அந்தப் பகுதியில் ஒரு ராணுவ தளத்தை அமைப்பதன் மூலம் தீவிரவாதிகளை அடக்குவது சீனாவுக்கு எளிதாகிவிடும். இது இந்தியாவுக்கும் அச்சுறுத்தலாகி விடும் என்பதுதான் பிரச்னை.
பாகிஸ்தான் தனக்குத் தேவையான ராணுவ தளவாடங்களில் 70 சதவீதத்தை சீனாவிடம்தான் வாங்கி வருகிறது. சப்ளையை நிறுத்திவிடுவேன் என மிரட்டியே காரியத்தை சாதிக்கலாம். இந்தியாவை மிரட்ட இதையும் ஒரு வாய்ப்பாக பாகிஸ்தான் பயன்படுத்திக் கொள்ளலாம். தனக்கும் பாதுகாப்பு, சீனாவுக்கும் உதவி செய்தது போல் ஆகும் என்பதால் பாகிஸ்தானும் ராணுவ தளம் அமைத்துக் கொள்ள அனுமதிக்கும். பாகிஸ்தானில் தொடங்கி, அப்படியே மியான்மர், இந்தப் பக்கம் இலங்கை, அந்தப் பக்கம் வட கொரியா, அப்புறம் நேபாளம் என செம்படைகளின் தளங்களை விரிவடையச் செய்வதுதான் சீனாவின் நோக்கமரீ.
உலகம் முழுக்க ராணுவ தளங்கள் வைத்திருக்கும் அமெரிக்காவை விமர்சனம் செய்துவந்த சீனா, இப்போது இதுபோன்ற ராணுவ தளங்கள் மூலம் பிராந்திய ஒற்றுமை அதிகரிக்கும் என புதிய விளக்கம் கூறி வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக