1 பிப்ரவரி, 2010

வளைகுடாவை நோக்கி அமெரிக்காவின்
கப்பல்கள்: ஈரானைக் கட்டுப்படுத்த முயற்சி



















நான்கு அரபு நாடுகளுக்கு ஏவுகணைகளும் அனுப்பி வைப்பு



வளைகுடாவைச் சுற்றி பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய அமெரிக்கா ஆயத்தமாகி வருகிறது. ஈரானின் அச்சுறுத்தலிருந்து வளை குடா நாடுகளைப் பாதுகாக்கும் நோக்குடன் ஏவுகணைகளையும், யுத்தக்கப்பல்களையும் அங்கு விரைவில் அனுப்பவுள்ளது.

ஈரானின் நடவடிக்கை களைக் கட்டுப்படுத்தல், அரபு நாடுகளுக்கு வழங்கிய வாக்குறுதிகளைக் காப்பற்றல் ஆகிய இரண்டு காரணங்களுக்காக இந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவதாக அமெரிக்காவின் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

கட்டார், ஐக்கிய அரபு இராச்சியம், குவைத், பஹ்ரைன், ஆகிய நாடுகளுக்கு அமெரிக்காவின் ஏவுகணைகளும், யுத்தக் கப்பல்களும், அனுப்பப்படவுள்ளன. ஓமானும் இவ்வாறான உதவிகளை வழங்குமாறு அமெரிக்காவைக் கேட்டுள்ளது. யுரேனியம் செறிவூட்டல் விடயங்களை ஈரான் நிறுத்தாவிட்டால் இராணுவ நடவடிக்கையில் இறங்கப்போவதாக இஸ்ரேல் எச்சரித்தது.

இராணுவ வல்லமையால் மத்திய கிழக்கை ஈரான் கட்டுப்படுத்த முயற்சிப்பதாக அரபு நாடுகள் குற்றம் சாட்டியதுடன் இதைக் கட்டுப்படுத்தாவிட்டால் தாங்களும் அணு ஆயுதத்தை வைத்திருக்க அனுமதிக்க வேண்டுமென அரபு நாடுகள் வேண்டுகோள் விடுத்தன.

அமெரிக்கா இந் நாடுகளைப் பொறுமை காக்குமாறு கேட்டுக் கொண்டதுடன் தற்போது உரிய நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இனி மேல் அரபு நாடுகள் ஈரானைப் பற்றி அச்சம் கொள்ளத் தேவையில்லை உரிய பாதுகாப்பு ஆயுதங்களை அங்கு அனுப்பவுள்ளோம் என அண்மையில் ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்தார்.

இதற்கிணங்க இது வரை மூன்று ஏவுகணைப் பாதுகாப்பு முறைகள் வளைகுடாவை நோக்கி அனுப்பப்பட்டுள் ளன. அமெரிக்காவின் இந்நடவடிக்கை ஈரானை அமைதி வழிக்குக் கொண்டு வரும் முயற்சியைப் பாதிக்கும் என நம்பப்படுகிறது.

ஈரானின் அபாயகரமான நடவடிக்கைகளை சீனா புரிந்து கொள்ள வேண்டுமெனக் கேட்டுள்ள அமெரிக்கா ஐ. நா. வின் யோசனைக்கு இணங்கி சீனா செயற்பட வேண்டுமெனவும் கேட்டுள்ளது.

எட்டு பற்றியட் ஏவுகணைகளை வளைகுடாவுக்கு அனுப்பும் எண்ணம் அமெரிக்காவுக்குள்ள தாக வளைகுடாவுக்குப் பொறுப்பான அமெரிக்க அதிகாரி குறிப்பிட்டார். யுரேனியம் செறிவூட்டல் வேலைகளை ஈரானின் புரட்சிகரப் படை கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக அமெரிக்கா நம்புகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக