27 ஜனவரி, 2010

ஜனாதிபதி தேர்தல் அமைதி சூழலில் நடந்தது: பெப்ரல்

ஜனாதிபதி தேர்தல் சமாதானமான அமைதிமிக்க சூழலில் நடந்து முடிந்ததாக சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல்களுக்கான மக்கள் செயற்பாடு (டஅஊஊதஉக) அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

மேற்படி அமைப்பை சேர்ந்த கண்காணிப்பாளர்களுக்கு 71 முறைப்பாடுகள் கிடைத்ததாகவும் இவற்றில் 35 முறைப்பாடுகளே உறுதிப்படுத்தப்பட்டதா கவும் அதில் நான்கு முறைப்பாடுகள் மட்டுமே பாரதூரமானதாக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் மேலும் கூறிப்ப ட்டுள்ளது.

தேர்தல் தினம் அமைதியாகவும் தேர்தல் சட்டத்தை பாரதூரமாக மீறும் சம்பவங்கள் இடம்பெறாமல் இருந்ததாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்ட போதிலும் முன்னர் கிடைத்த தகவல்களின்படி அமைப்புக்கு 757 முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாகவும் அதில் 578 உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அதில் 300 பாரதூரமானவை என்றும் அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக