19 ஜனவரி, 2010

முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர்களை
500 பேர் கொண்ட குழுக்களாக பிரித்து விரும்பும் துறையில் தொழிற்பயிற்சி



புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் அனைவரையும் அவர்கள் முன்னெடுக்க விரும்பும் துறைகளின் அடிப்படையில் 500 பேர்களாகப் பிரித்துஇ அவர்களுக்கு சொந்த இடங்களுக்கு அருகில் புனர்வாழ்வு வழங்க தீர்மானித்துள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் தயா ரத்னாயக்க தெரிவித்தார்.

இவர்களுக்கு புனர்வாழ்வு வழங்குவத ற்காக யாழ்ப்பாணத்தில் 4 இடங்களும்இ வவுனியாவில் 5 இடங்களும்இ வெலிக்கந்தையில் 3 இடங்களும்இ திருகோணமலையில் 3 இடங்களும்இ மட்டக்களப்பில் 4 இடங்களுமாக 20 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இவற்றில் மெனிக்பாமில் உள்ள நலன்புரி முகாம்களில் 4 புனர்வாழ்வு நிலையங்கள் விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளதாக ஆணையாளர் தெரிவித்தார். வவுனியா பம்பைமடுவில் ஆயிரம் பேருக்கு புனர்வாழ்வளிக்கும் நிலையமொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்களின் விருப்பத்தின் அடிப்படையில் அனைவரும் 500 பேர் கொண்ட குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். மீன்பிடித் துறைஇ விவசாயத் துறைஇ கணனிசார் துறைஇ மிருகவளர்ப்புஇ தையல் துறை என பல்வேறு துறைகளாகப் பிரிக்கப்பட்டுஇ இவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவர்களில் பலர் முன்னர் மீன்பிடித் துறைஇ விவசாயத் துறை போன்ற பல்வேறு துறைகளில் ஈடுபட்டவர்களாவர்.

சிறுவயதில் புலிகள் இயக்கத்தில் இணைக்கப்பட்டதால் கற்க முடியாமல் போனவர்களில் தொடர்ந்து படிக்க விரும்புவோருக்கு கற்பிப்பதற்கும் புனர்வாழ்வு ஆணையாளர் அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுதவிர இவர்களுக்கு ஆங்கிலமொழி கற்பிக்கப்ப டுவதோடு இசைஇ நடனம் ஆகிய துறைகளிலும் ஈடுபட வசதிகள் அளிக்கப்படுவதாக ஆணையாளர் கூறினார். புனர்வாழ்வு பெறும் முன்னாள் உறுப்பினர்களில் ஒரு தொகுதியினர் விடுவிக்கப்பட்டுள்ளதோடுஇ சிலருக்கு வெளிநாட்டில் தொழில் வாய்ப்பும் வழங்கப்பட்டது.

புனர்வாழ்வு செயற்பாடு முடிந்தபின் இவர்களுக்கு தமது சொந்த ஊர்களுக்குச் சென்று தாம் பயிற்சி பெற்ற துறையில் ஈடுபட சந்தர்ப்பம் அளிக்கப்பட உள்ளது. புனர்வாழ்வு பெற்றுவரும் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள்இ எதிர்காலம் பற்றி நம்பிக்கையுடனும் சிறந்த மன நிலையுடனும் உள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

புனர்வாழ்வு செயற்பாடு முடிந்த பின்னர் ஒவ்வொரு நபரினதும் முன்னேற்றம் குறித்து ஆராயப்பட்ட பின் ஜனாதிபதி நியமிக்கும் நீதிபதிகள் குழுவின் சிபார்சின்படி விடுவிக்கப்பட உள்ளனர்.

தற்பொழுது 10இ 832 பேர் புனர்வாழ்வு பெற்று வருகின்றனர். இவர்களில் 2இ500க்கும் அதிகமானவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களாவர். 2இ500க்கும் அதிகமானவர்கள் கிளிநொச்சியையும்இ 2இ000க்கும் அதிகமான வர்கள் முல்லைத்தீவையும்இ சுமார் 1இ000 பேர் வவுனியாவையும்இ சுமார் 500 பேர் மட்டக்களப்பையும்இ 500க்கும் அதிகமானவ ர்கள் மன்னாரையும்இ சுமார் 500 பேர் திருகோணமலையையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



விசாரனைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகள் உடனடியாக விடுவிப்பு





வழக்குத்தாக்கல் செய்யப்பட வேண்டியவர்களை பிணையில் விடுவிக்கவும் ஏற்பாடு

பல்வேறு காரணங்களால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மலையக இளைஞர்களை உடனடியாக விடுதலை செய்ய சட்ட மா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வேண்டுகோளின் பேரில் கைதிகளின் கோவைகளைத் துரிதமாக ஆராய்ந்துஇ அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்திருப்பதாக சட்ட மா அதிபர் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.

இதன்படி 83 மலையக இளைஞர்கள் தாமதமின்றி விடுவிக்கப்படவுள்ளனர். ஜனாதிபதியிடம் .தொ.கா. விடுத்த வேண்டுகோளின் பேரில்இ இதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியு ள்ளார்.

கொட்டகலையில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் செயலாளர் நாயகம் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான முக்கியஸ்தர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின்போது இதற்கான உறுதிமொழியை ஜனாதிபதி வழங்கியிருக்கின்றார்.

இந்த சந்தர்ப்பத்தில்இ சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இளைஞர்க ளின் பெற்றோரும் சமுகந்தந்துஇ தமது பிள்ளைகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்திருந் தனர்.

கைதிகளின் விபரங்களை அமைச்சர் தொண்டமான் ஜனாதிபதியிடம் கையளித்தார். இந்நிலையில் சிறு சிறு தவறுகளுக்காகக் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய சட்ட மா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதேவேளை பாரிய குற்றச்சாட்டுகளைப் புரிந்தவர்கள் தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்து அவர்களைப் பிணையில் விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்தது.

பயங்கரவாத தடைச் சட்டம்இ அவசர காலச் சட்டம் ஆகியவற்றின் கீழ் கைது செய்யப்பட்ட சுமார் அறுநூறு இளைஞர்கள் வழக்குகள் எதுவுமின்றி நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரையும் இம்மாத இறுதிக்குள் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சட்ட மா அதிபர் திணைக் களம் மேலும் தெரிவித்தது.

ஏற்கனவே 390 கைதிகள் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


தமிழர்கள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு வாக்களிப்பது உறுதி

அமைச்சர் டளஸ்



வடக்குஇ கிழக்குஇ மலையகம் உட்பட நாடு முழுவதிலும் உள்ள தமிழ் மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களிப்பது உறுதி என்று போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

நாட்டில் சமாதானத்தையும்இ அமைதியை யும் விரும்பும் சகல இன மக்களும் ஜனாதிபதியை மீண்டும் தெரிவு செய்வதற்கு தயாராக உள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செய்தியாளர் மாநாடு நேற்றுக் காலை மகாவலி கேந்திர நிலையத்தில் நடை பெற்றது. அமைச்சர் டளஸ் அழகப்பெரும மேலும் உரையாற்றுகையில்இ

வடக்குஇ கிழக்கு உட்பட நாடு முழுவதிலும் பயங்கரவாதம் அற்ற சூழல் தற்போது நிலவுகின்றது. எனவே தமிழ் மக்கள் இம்முறை எந்தவித தயக்கமும் இன்றி ஜனாதிபதிக்கு வாக்களிப்பது உறுதி.

வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாஇ கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்இ முதல்வர் சிவநேசத்துரை சந்திரகாந்தன்இ மலையகத்தைப் பிரதிநிதித்துவம்படுத்தும் அமைச்சர் தொண்டமான்இ பிரதியமைச்சர் முத்துசிவலிங்கம் போன்றோர் இன்று ஜனாதிபதியின் வெற்றிக்காக முழு பங்களிப்புக்களையும் வழங்கி வருகின்றனர்.

அதேபோன்று ஸ்ரீல. சு. கவின் வரலாற்றில் அரசியல் அதி உயர் பீடம் தொடக்கம் சாதாரண மட்டம் வரையில் தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதிகள் உள்ளனர். அவர்கள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளனர்.

எனவேஇ தமிழ் மக்களின் வாக்குகள் எமக்கு கிடைப்பது உறுதியாகும்.

ஜனாதிபதியின் தேர்தல் பிரசாரம் தற்போது சூடுபிடித்துள்ளது. உள்ளூரிலும்இ சர்வதேச ரீதியிலும் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்புகளிலும்இ ஆய்வு மதிப்பீடுகளிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேர்தலில் வெற்றி பெறுவது உறுதி என்று கூறப்பட்டுள்ளது.

ஒவ்வொரு தேர்தலின் போதும் வேட்பாளர்கள் மாறுபட்ட விஞ்ஞாபனங்களைஇ வாக்குறுதிகளை வழங்குவது வழக்கம். மற்றைய வேட்பாளரைப் போல் இல்லாமல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது முதலாவது தேர்தல் விஞ்ஞாபனத்தின் தொடர்ச்சியானதாக மஹிந்தவின் சிந்தனை தொலைநோக்கு என்ற அடிப்படையில் வழங்கியுள்ளார்.

அரசாங்க ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு விடயத்தில் இரு பிரதான வேட்பாளர்கள் வழங்கியுள்ள வாக்குறுதிகளில் பாரிய மாற்றம் உள்ளது. 2500 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்குவதாக ஜனாதிபதியும் பத்தாயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்குவதாக சரத் பொன்சேகாவும் கூறியுள்ளனர்.

எனினும் அரசியலில் அனுபவமுள்ள ஜனாதிபதி வழங்கக் கூடிய அளவிலான சம்பள உயர்வையே கொடுப்பதாக கூறியுள்ளார்.

பொன்சேகா வழங்க முடியாத அதிகரிப்பையே வழங்குவதாக கூறியுள்ளார். நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒருபோதும் வழங்குவதில்லை.

இந்த நாட்டில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட முன்னைய வேட்பாளர்கள் போன்று இம்முறை சரத் பொன்சேகா இல்லை. சரத்பொன்சேகாவின் செயற்பாடுகள் மூர்க்கத்தனத்துடன் கூடியதான வைராக்கியம்இ கோபம்இ குரோதம்இ மோசமான வார்த்தைப் பிரயோகம் போன்றவற்றை வெளிப்படையாகக் கொண்டது.

அதிகாரத்தை கேட்கும் போதே இது போன்று மூர்க்கத்தனமாக நடந்து கொள்பவர் அதிகாரத்துக்கு வரும் சந்தர்ப்பம் கிடைத்தால் எவ்வாறு இருப்பார். எனவே மக்கள் ஒரு போதும் இவரை அனுமதிக்கப் போவதில்லை.

பொலிஸ் உயர் அதிகாரிகளின் சீருடையை களைவேன்இ முள்ளுகளை சாப்பிட வைப்பேன்இ பொருளாதார நிபுணர்களை துரத்தியடிப்பேன் என்னும் மோசமான வார்த்தைகளையும் சரத் பொன்சேகா மேடைகளில் பாவித்து வருகின்றார். இது ஜனநாயகத்திற்கு ஒருபோதும் சரிவராது.

சேறு பூசும் அரசியல் கலாசாரத்தை ஆரம்பித்தவர்கள் எதிர்க்கட்சியினர். அவர்கள் இதனை நிறுத்த வேண்டும்.

இந்த நாட்டில் வாழும் சகல இன மக்களும் தற்பொழுது தான் தேசியக் கொடியை தூக்கியுள்ளனர்.

பச்சைஇ நீலம்இ சிவப்பு என்று பல்வேறு வர்ணங்களைக் கொண்ட கட்சிக் கொடிகளை தூக்கியவர்கள் அதனை எறிய வேண்டும் என்று நாங்கள் கேட்கவில்லை. சகலரும் ஒன்றிணைந்து 26 ம் திகதி தேசியக் கொடியை தூக்குமாறு கோருகின்றோம் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கனகரட்ணம் எம்.பி ஜனாதிபதியை ஆதரிக்க முடிவு

பிரசாரக் கூட்டங்களிலும் பங்கேற்பார்



தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரட்ணம்இ ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவினை ஆதரிக்க முன்வந்துள்ளார்.

கடந்த இரண்டு தினங்களாக மல்லாவிஇ யோகபுரம்இ துணுக்காய்இ ஆகிய இடங்களில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போது தனது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளார்.

அங்கு கருத்துத் தெரிவித்த அவர்இ வன்னியில் மீளக்குடியேறியுள்ள மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கே வாக்களிக்க வேண்டும். அதன் மூலம் பல அபிவிருத்திகளை ஏற்படுத்த முடியுமென கூறியுள்ளார்.

மல்லாவியிலும் யோகபுரத்திலும் மீளக்குடியேறிய மக்களுக்கு இரண்டு சில்லு உழவு இயந்திரங்கள் 50இ தையல் மெசின்கள் 50 வழங்கும் வைபவத்திலும் கனகரட்ணம் எம்.பி கலந்து கொண்டார்.

மல்லாவியில் நடைபெறவுள்ள முக்கிய தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கனகரட்ணம் எம்.பியும் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார் எனத் தெரிவிக்கப்ப டுகின்றது. கடந்த புதன்கிழமை மாலை இவர் தடுப்பு காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

வட பகுதியில் இணக்கச் சபைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன



வட பகுதியில் இணக்கச் சபைகளை ஆரம்பிக்க நீதிமற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. முதற்கட்டமாக வவுனியா தெற்கு பிரதேச செயலாளர் பிரதேசத்துக்கு இணக்க சபையை அமைக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கான பயிற்சி நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கு ஆசிய மன்றத்தின் ஆணையாளர் அலு வலகம் அனுசரணை வழங்கியுள்ளது.

வட பகுதியில் இதுவரை காலம் இடம்பெற்று வந்த யுத்த சூழ்நிலை காரணமாக அங்கு இணக்க சபைகளை ஆரம்பிக்க முடியாமல் இருந்ததாக கூறப்படுகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக