5 நவம்பர், 2010

நாட்டை அபிவிருத்தி பாதைக்கு இட்டு செல்ல ஒளி பிறக்கட்டும் பிரதமர் டி. எம். ஜயரட்ன

உலக வாழ் இந்துக்கள் அனை வரும் தீபாவளித் திருநாளைக் கொண்டாடும் இன்றைய தினத்தில் எமது நாட்டிலுள்ள அனைத்து இந்து மக்களும் சுதந்திரமாகவும், மகிழ்ச்சியாகவும் தீபத் திருநாளை கொண்டாட கிடைத்துள்ளமை யையிட்டும் அவர்களோடு அந்த மகிழ்ச்சியில் பங்கு கொள்ளவும் கிடைத்துள்ளமையை யிட்டும் நான் பெருமைப்படுகிறேன் என பிரதமர் டி. எம். ஜயரட்ன தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட் டுள்ளார்.

அதர்மத்தை வென்று தருமம் நிலைநாட்டப்பட்டதை குறிப்பதே தீபாவளியின் பிரதான கருத்தாகும். மக்களை துன்புறுத்தி வந்த நரகா சுரனை ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா வதம்செய்து மக்களுக்கு விமோச னத்தை பெற்றுக் கொடுத்தார்.

இதனை உலக இந்து மக்கள் அனைவரும் மிகவும் பக்தியோடும், மகிழ்ச்சியோடும் நினைவு கூருவதுடன் கொண்டாடியும் வருகின்றனர். இலங்கையில் இன்று சுதந்திரமாகவும் நிம்மதியாகவும், இத் தீபத் திருநாளை கொண்டாடுகின்ற மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள் கிறேன் என்றும் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக