5 நவம்பர், 2010

வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் 6 மாதத்தினுள் மீள்குடியேற்றம் மன்னார் செயலகம்

வட பகுதியில் இருந்த புலிகளினால் பலாத்காரமாக வெளியேற்றப்பட்ட சுமார் 30 ஆயிரம் முஸ்லிம் குடும்பங்களை 6 மாதகாலத்தி னுள் மீள் குடியேற்றும் வகையில் முஸ்லிம்களுக்கான செயலகம் ஒன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ள தாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக் வெல்ல கூறினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் கெஹலிய;

நவம்பர் முதலாம் திகதி முதல் 6 மாத காலத்திற்கு இந்த செயலகம் மன்னார் முசலி பிரதேசத்தில் இயங்கும். இதனூடாக 1990 ஆம் ஆண்டு புலிகளினால் வெளியேற்றப்பட்ட புத்தளம் உட்பட பல்வேறு பகுதிகளில் வாழும் வடபகுதி முஸ்லிம்களை தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும்.

30 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 90 ஆயிரம் பேர் 48 மணி நேரத்தில் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அமைதி நிலை உருவாக்கப்பட்டுள்ள நிலையில் தமது சொந்த இடங்களுக்கு திரும்ப அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக