5 நவம்பர், 2010

மலையக மக்களின் வாழ்வில் இருள் நீங்கி ஒளி பிறக்கட்டும்

இருள் சூழ்ந்த மக்களை ஒளிக்கு கொண்டு வந்து அவர்களின் உள்ளங்களில் இருள் நீங்கி ஒளியை பிரகாசிக்கச் செய்த இந்த தீபாவளி திருநாளை நாம் மிக்க மகிழ்ச்சியோடு வரவேற்கின்றோம்.

பெருந்தோட்ட மக்களுக்கு எதிர்பார்க்கப்படும் அனைத்து வரப்பிரசாதங்களும், அவர்களது அபிலாசைகளும் நிறைவேற்றப்படும் என்ற பெரிதான நம்பிக்கை எமக்குண்டு என இ. தொ. கா. பொதுச் செயலாளரும், கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்ச ருமான ஆறுமுகன் தொண்டமான் தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது:- மலையக மக்களின் வாழ்வுக்கும், வாழ்க்கைத்தர உயர்வுக்கும் பொருளாதார மேம்பாட்டுக்கும், ஆக்கபூர்வமான திட்டங்களை இ. தொ. கா. வகுத்துள்ளது.

தூரநோக்கோடு மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும், இந்த ஆண்டு இறுதியில் நல்ல பலன் களை அளித்துவிடும் என்று நாம் நம்புகின்றோம் என தனது செய்தியில் தொண்டமான் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக