9 செப்டம்பர், 2010

சதாரண பொது மகனுக்கு சிறைத் தண்டனை, தேசத் துரோகிக்கு சுகபோகம்: ரவி கருணாநாயக்க




2500 ரூபா கொள்ளையடித்த பொதுமகன் ஒருவரை சிறையில் வைத்திருக்கிறீர்கள். ஆனால் கடவுச் சீட்டு இல்லாமல் வெளிநாட்டுக்கு சென்ற விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய கே.பி.யை சதந்திரமாக நாட்டில் நடமாட விட்டு இருக்கின்றீர்கள். இது எவ்விதத்தில் நாயம். என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாயக்க பாராளுமன்றத்தில் இன்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய ரவி கருணாநாயக்க, சதாரண குற்றம் புரிந்த பொது மகனுக்கு சிறைத்தண்டனை வழங்கப்படுகின்றது. அவருக்கு பிணை வழங்கப்படுவதும் இல்லை. ஆனால் 1989 ஆம் ஆண்டு கே.பி என்வர் கடவு சீட்டு இன்றி வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றவரும் நாட்டுக்கு தேசத் துரோகம் புரிந்தவரும் ஆவார்.

தேசத்துரோகம் புரிந்த ஒருவருக்கு சுகபோகம் அனுபவிக்க கூடியதாக இந் நாட்டிலேயே காணப்படுகின்றது. என மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக