9 செப்டம்பர், 2010

யாழ்ப்பாணத்தில் இன்று தாதியர் நேர்முகப் பரீட்சை

வட மாகாணத்தை சேர்ந்தவர்களுக்கான மாணவ தாதியர் ஆட்சேர்ப்புக்கான நேர்முகப்பரீட்சை இன்று 9 ஆம் திகதி யாழ்ப்பாணத்திலும், எதிர்வரும் 14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வவுனியாவிலும் நடைபெறவுள்ளதாக வடமாகாண ஆளுநரின் பிராந்திய ஆணையாளர் எஸ்.எல்.டீன் தெரிவித்துள்ளார்.

இந்த நேர்முகப்பபரீட்சைக்கு வன்னி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தோற்றவுள்ளனர்.

இந்நிலையில், நாளை யாழில் நடைபெறும் பரீட்சைக்கு செல்வதில் பல சிரமங்கள் இருப்பதாக வவுனியாவிலுள்ள பரீட்சார்த்திகள் தெரிவித்திருந்தனர். இப்பரீட்சையை வவுனியாவிலும் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் பரீட்சார்த்திகள் கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டதையடுத்து, மேற்படி நேர்முகப் பரீட்சையை வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்ட பரீட்சார்த்திகள் நலன் கருதி வவுனியாவில் நடத்த தீர்மானித்துள்ளதாக ஆணையாளர் கூறினார்.

இந்த நேர்முகப் பரீட்சைகள் அன்றைய தினம் காலை 8.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணி வரை வவுனியா தாதியர் பயிற்சிப் பாடசாலையில் நடைபெறும் என்றும் அவர் மேலும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக