18 செப்டம்பர், 2010

மட்டு.வெடிப்புச் சம்பவம்: உயிரிழந்த சீனர்களின் சடலங்கள் தாய்நாட்டுக்கு

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ்நிலைய வளாகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்த சீனர்கள் இருவரின் சடலங்கள் இன்று தாய்நாட்டுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக அந்நாட்டுத் தூதரகம் தெரிவிக்கிறது.

இவர்களின் சடலங்கள் நேற்றிரவு 9 மணியளவில் விசேட ஹெலிகொப்டர் மூலம் கொழும்புக்குக் கொண்டுவரப்பட்டதாக மட்டக்களப்பு போதான வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் முருகானந்தன் வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.

வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்தவர்களைப் பார்வையிட பிரதமருடன் சீனத் தூதுவர் நேற்றைய தினம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக