18 செப்டம்பர், 2010

வெடிப்புச் சம்பவம் ஒத்துழையாமை நடவடிக்கையாக கருதப்பட முடியாது: உபய மெதவல

கரடியனாற்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவம் ஒத்துழையாமை நடவடிக்கையாக கருதப்பட முடியாதென இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவல தெரிவித்துள்ளார். அரசியல் காரணிகளோ அல்லது ஒத்துழையாமை நடவடிக்கையோ இந்த வெடிப்பின் பின்னணியில் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார் கரடியனாற்றில் இடம்பெற்ற பாரிய வெடிப்புச் சம்பவம் குறித்து விசேட விசாரணைகள் நடத்தப்பட உள்ளதாக இராணுவத்தினர் அறிவித்துள்ளனர். இராணுவப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


மட்டக்களப்பு, கரடியனாறு வெடிப்புச் சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மற்றொரு பொலிஸ் உத்தியோத்தர் நேற்றிரவு 9.30 மணியளவில் மரணமானதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் டாக்டர் எம்.முருகானந்தன் வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக