28 செப்டம்பர், 2010

சந்திரனை ஆராய சீனாவின் புது திட்டம்


சந்திரனை ஆராயும் இரண்டாவது செயற்கைகோளை சீனா, வரும் 1ம் தேதி விண்ணில் செலுத்துகிறது. விண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்கா, ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக சீனா வேகமாக வளர்ந்து வருகிறது. கடந்த 2007ல் அக்டோபர் மாதம் சந்திரனை ஆராயும் சாங்க் இ-1 என்ற செயற்கை கோளை செலுத்தியது. இந்நிலையில் வரும் 1ம்தேதி சாங்க் இ-2 என்ற செயற்கை கோளை விண்ணில் செலுத்துகிறது. ஐந்து நாள் பயணத்துக்கு பிறகு இந்த செயற்கைகோள் சந்திரனுக்கு அருகே 100 கி.மீ., தொலைவை சென்றடையும். இதற்கு அடுத்தபடியாக வரும் 2013ல் சாங்க் இ-3 செயற்கைகோள் சந்திரனுக்கு செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மூன்று செயற்கைகோள்கள் அளிக்கும் தகவல்களின் அடிப்படையில் 2025ல் சந்திரனுக்கு விண்வெளி வீரர்களை அனுப்ப சீன விண்வெளி ஆராய்ச்சி மையம் முடிவு செய்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக