28 செப்டம்பர், 2010



குக்குலுகலை தோட்ட மக்கள் முழுமையாக இன்னமும் வீடு திரும்பவில்லை
இரத்தினபுரி மாவட்டம் நிவித்திகலை, குக்குலுகலை தோட்டப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்தவர்களில் சிலர் வீடு திரும்பியுள்ளனர். எனினும் சம்பவம் நடந்து இரு வர்ரங்களாகிவிட்ட நிலையில் இடம்பெயர்ந்த தமிழர்கள் இன்னமும் முழுமையாக வீடுதிரும்பவில்லை என அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

பாடசாலை மாணவர்கள் தனியாகச் செல்ல அச்சம் தெரிவிப்பதால், பெற்றோர் அவர்களை வேறுவேறு பாடசாலைகளில் சேர்த்துள்ளதாகவும் , தமது குடியிருப்புகளுக்கு திரும்பியுள்ளவர்கள் இரவுவேளைகளில் அச்சத்துடன் இருப்பதாவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கடந்த 11ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டார். இதற்கு தமிழர்களே காரணம் எனக்கூறியே இப்பகுதியில் வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது.

இதன் காரணமாக 75 குடும்பங்களைச் சேர்ந்த 300இற்கும் அதிகமானோர் காடுகளில் தஞ்சமடைந்தனர். அவ்வேளை, அவர்களின் வீடுகள் சூறையாடப்பட்டு கால்நடைகள் பல கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக