28 செப்டம்பர், 2010

யுத்தத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டோருக்கு நஷ்ட ஈடு

யுத்தத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டு தமது சொத்துக்களை இழந்து இடம்பெயர்ந்த 250 பேருக்கு நஷ்ட ஈடாக 25 மில்லியன் ரூபா வழங்கப்படவுள்ளதாக மீள்குடியேற்றம், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நஷ்ட ஈட்டை பெற்றுக்கொள்வதாயின் விண்ணப்பதாரி யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இடத்தில் வசித்திருக்க வேண்டும். கிராம சேவையாளரிடம் தம்மை பதிவு செய்திருக்க வேண்டும். இவரது விண்ணப்பத்தை மாவட்ட செயலகம் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

முன்னர் எந்த நட்ட ஈட்டையும் பெறாதவராக இருக்க வேண்டும் என புனர்வாழ்வு அதிகாரசபையின் தலைவர் ஈ.ஏ எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் யுத்தத்தால் சொத்துக்களை இழந்த நிலையில் யுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டோருக்கு பத்து இலட்சம் ரூபாவும் சொத்துக்களை இழந்தவர்களுக்கு 2.5 மில்லியன் ரூபாவும் வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக