27 செப்டம்பர், 2010

ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; மூவர் பலி கட்டுநாயக்க ரயில் கடவையில் கோரம்


கட்டுநாயக்கா ரயில்வே கடமையில் நேற்று இடம்பெற்ற ரயில் விபத்தொன்றி மூவர் பலியாகியதுடன் மற்றுமொருவர் படுகாயங்களுடன் கொழும்பு பெரியாஸ் பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்றிரவு 6.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த நால்வரே இவ்விபத்துக்கு இலக்காகியுள்ளனர். இவர்களில் இருவர் பெண்களாவர்.

விபத்தில் பலியான மூவரது சடலங்களும் நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. காயமடைந்தவர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து கொழும்பி பெரியாஸ்பத்திரிக்கு அனுப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக ரயில்வே துறை உயரதிகாரியான விஜயசமரசிங்க தகவல் தருகையில், நேற்றைய தினம் 6.14 மணியளவில் கொழும்பு கோட்டையிலிருந்து ரயில் எஞ்சினொன்று சிலாபத்தை நோக்கி சென்றது.

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயப் பிரதேசத்தில் நான்கு பேர் பயணித்த மோட்டார் சைக்கிளானது ரயில் கட வையை ஊடறுத்துச் செல்ல முனைகையிலேயே மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளது. ரயில் என்ஜின் மோட்டார் சைக்கிளில் மோதியதில் ஸ்தலத்திலேயே மூவர் பலியாகியதுடன் ஒருவர் படுகாயங்களுடன் வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். மேற்படி விபத்தில் சம்பந்தப் பட்ட நால்வரும் கட்டுநாயக்க பிரதேச வாசிகளல்ல எனவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார். விசாரணைகள் தொடர்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக