27 செப்டம்பர், 2010

அமெரிக்க வர்த்தகர்களுடன் ஜனாதிபதி சந்தித்து பேச்சு


நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமெரிக்காவிலுள்ள முக்கிய வர்த்தகர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது இலங்கையில் வெளிநாட்டு முதலீடுகள் குறித்து கலந்துரையாட ப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

அமெரிக்காவின் பிரபல வர்த்தகர்கள் பங்குபற்றிய கூட்டமொன்று நியூயோர்க்கில் இடம்பெற்றது. இதில் பிரபல வர்த்தகர்கள் 100க்கும் அதிகமானோர் கலந்து கொண்டுள்ளனர்.

இதன்போது அமெரிக்க பிரபல வர்த்தகர்களை சந்தித்த ஜனாதிபதி இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வது குறித்து ஒவ்வொருவரின் கவனத்திற்கும் கொண்டு வந்துள்ளார்.

இதற்கு அமெரிக்க வர்த்தகர்களும் தமது இணக்கத்தை வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ், வர்த்தகர்கள் முதலீடுகளை மேற்கொள்ள இலங்கை தற்போது சிறந்த தகுதியுடைய நாடு என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக