4 ஆகஸ்ட், 2010

நடமாடும் வாகனமொன்றில் போலி வாகன பதிவு நிலையம்

நாரஹேன்பிட்டி வாகனப் பதிவு திணைக்களம் அருகில் கண்டுபிடிப்பு; 3பேர் கைது, ஆவணங்களும் சிக்கின

நாரஹேன்பிட்டியிலுள்ள மோட்டார் வாகன பதிவு திணைக்களத்துக்கு அருகில் கடந்த பத்து வருட காலமாக நடமாடும் வாகனமொன்றில் செயற்பட்டு வந்த போலி வாகன பதிவு நிலையமொன்று கொழும்பு குற்றப் பிரிவு பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போலி நடமாடும் வாகன பதிவு நிலையத்தை கண்டுபிடித்த குற்றப் பிரிவு பொலிஸார், குறிப்பிட்ட வாகனத்தில் இருந்து போலி வாகன அனுமதி பத்திரங்கள், பல்வேறு ஆவணங்கள் ஆகியவற்றுடன் 2 இலட்சம் ரூபா பணத்தையும் கைப்பற்றியதுடன் மூவரை கைது செய்துள்ளனர்.

60-6199 என்ற இலக்கத்துடன் கூடிய வாகனத்திலேயே இந்த போலி வாகன பதிவு நிலையம் செயற்படுத்தப்பட்டு வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் குளியாப்பிட்டிய பிங்கிரிய பிரதேசத்தை சேர்ந்தவர். மற்றைய இரு சந்தேக நபர்களும் இராஜகிரிய மற்றும் நாரஹேன்பிட்டி மெனிங் டவுண் பகுதியை சேர்ந்தவர்களாவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக